-
தமிழ்நாடு
- சென்னை
- கடலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- வேலூர்
- கள்ளக்குறிச்சி
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டிணம்
- கோவை
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தருமபுரி
- காஞ்சிபுரம்
- சேலம்
- திருச்சி
- திருப்பூர்
- ஈரோடு
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- கரூர்
- பெரம்பலூர்
- திருவாரூர்
-
திண்டுக்கல்
-
கன்னியாகுமரி
-
மதுரை
-
இராமநாதபுரம்
-
சிவகங்கை
-
தேனி
-
தூத்துக்குடி
-
விருதுநகர்
-
தென்காசி
-
திருநெல்வேலி
-
முதன்மை செய்தி
-
தேசிய செய்திகள்
-
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
`சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை பெய்யும்!'- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி (நாளை) தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 17-ம் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
18-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இதனால், இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
நவ.17, 18-ம் தேதிகளில் மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று கூறினார்.

4 மாவட்டங்களில் 5000 மருத்துவ முகாம்கள்!- தலைமைச் செயலாளர் இறையன்பு தகவல்
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ததால் சில இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அத்தகைய பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நிவாரணப் பணியில் சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய போர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர் நாரணவரே மணீஸ் ஷங்கர்ராவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மழை நீர் புகுந்த இடங்கள், மழை நீர் வடிந்த இடங்களில் வரும் நாட்களில் தொற்று நோய்களைத் தடுக்க பன்முக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உள்ளது.
ஏற்கெனவே, மக்கள் தங்கும் தற்காலிக நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருதோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது 5,000 முகாம்கள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டது.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 750 முகாம்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மைலாடுதுறை மற்றும் இதர மாவட்டங்களில் எஞ்சிய 4,250 முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இது தவிர, 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட வார்டுகளில் மருத்துவ சேவையை வழங்கப்படும்.
நோய் தடுப்பு முகாம்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நாய்க்கடி, பாம்புக்கடி, மூச்சுத் திணறல், மஞ்சல் காமாலை, உணவு மற்றும் தண்ணீரால் நோய்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றும் எவருக்கேனும் இத்தகைய அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் நோய் குறித்த விழிப்புணர்வும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், புகை தெளிப்பான் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் நோய் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இத்தகைய முகாம்கள் தேவைப்படும் மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
மழையால் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 6-வது நாளாக ஆய்வு செய்தார். இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவவட்டங்களில் ஆய்வை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக இன்று செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், வண்டலூர் வட்டத்திற்குப்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு கீழ்க்கோட்டையூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார்.
மேலும், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில், முதலமைச்சர் கீழ்கோட்டையூரில் உள்ள தேநீர் கடையில், தேநீர் அருந்தி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, ஆய்விற்கு செல்லும் வழியில், கண்டிகையில் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர், அடையாறு ஆறு துவங்கும் இடம் மற்றும் மண்ணிவாக்கம், அடையாறு ஆற்று பாலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், முடிச்சூர், சி.எஸ்.ஐ. செயின்ட் பால்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, முடிச்சூர் டோல்கேட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
அதனைத் தொடாந்து, முடிச்சூர், மதனபுரத்தில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இறங்கி நடந்து, வெள்ளநீர் அகற்றிடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இறுதியாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

40 பேர் சாட்சியங்களாக சேர்ப்பு!- சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல்!
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 40 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நடிகை யாஷிகா மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
கார் விபத்து விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.
'ஜாம்பி', 'துருவங்கள் பதினாறு' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் வந்த கார் கடந்த 24ம் தேதி விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கான பதில் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதில், கடந்த 24ம் தேதி மாலை யாஷிகா தனது டாடா ஹேரியர் காரை ஓட்டி வந்ததாகவும், அவருக்கு இடது பக்க இருக்கையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது தோழி பவானி என்பவரும், பின் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த சையத் மற்றும் அமீர் ஆகியோரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு பேரும் மாமல்லபுரத்தில் இருந்து, இரவு 11 மணிக்கு ஈசிஆர் சாலையில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது சூளேரிக்காடு பேருந்து நிறுத்தத்தை தாண்டியதும், கார் நிலை தடுமாறி சாலையின் இடப்பக்கத்தில் தடுப்பு மீது மோதி தலைகீழாக கவிழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டு அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்!- திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று அந்தப்பகுதியில் விழுந்துள்ளது. அந்த பொருளானது சுமார் 10 கிலோ எடையுடனும் காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் அது வெடிபொருளாக இருக்கலாம் என கருதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மர்ம பொருளை பார்வையிட்ட விஏஓ, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த காவல்நிலையம் எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்
