-
தமிழ்நாடு
- சென்னை
- கடலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- வேலூர்
- கள்ளக்குறிச்சி
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டிணம்
- கோவை
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தருமபுரி
- காஞ்சிபுரம்
- சேலம்
- திருச்சி
- திருப்பூர்
- ஈரோடு
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- கரூர்
- பெரம்பலூர்
- திருவாரூர்
-
திண்டுக்கல்
-
கன்னியாகுமரி
-
மதுரை
-
இராமநாதபுரம்
-
சிவகங்கை
-
தேனி
-
தூத்துக்குடி
-
விருதுநகர்
-
தென்காசி
-
திருநெல்வேலி
-
முதன்மை செய்தி
-
தேசிய செய்திகள்
-
மாநில செய்திகள்
திருவள்ளூர்
`சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை பெய்யும்!'- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி (நாளை) தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 17-ம் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
18-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இதனால், இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
நவ.17, 18-ம் தேதிகளில் மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று கூறினார்.

4 மாவட்டங்களில் 5000 மருத்துவ முகாம்கள்!- தலைமைச் செயலாளர் இறையன்பு தகவல்
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ததால் சில இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அத்தகைய பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நிவாரணப் பணியில் சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய போர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர் நாரணவரே மணீஸ் ஷங்கர்ராவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மழை நீர் புகுந்த இடங்கள், மழை நீர் வடிந்த இடங்களில் வரும் நாட்களில் தொற்று நோய்களைத் தடுக்க பன்முக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உள்ளது.
ஏற்கெனவே, மக்கள் தங்கும் தற்காலிக நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருதோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது 5,000 முகாம்கள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டது.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 750 முகாம்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மைலாடுதுறை மற்றும் இதர மாவட்டங்களில் எஞ்சிய 4,250 முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இது தவிர, 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட வார்டுகளில் மருத்துவ சேவையை வழங்கப்படும்.
நோய் தடுப்பு முகாம்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நாய்க்கடி, பாம்புக்கடி, மூச்சுத் திணறல், மஞ்சல் காமாலை, உணவு மற்றும் தண்ணீரால் நோய்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றும் எவருக்கேனும் இத்தகைய அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் நோய் குறித்த விழிப்புணர்வும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், புகை தெளிப்பான் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் நோய் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இத்தகைய முகாம்கள் தேவைப்படும் மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

4 மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!- 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபி கடல் பகுதிக்கு நகரக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திர வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மற்றும் நாளை திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
5 மற்றும் 6ம் தேதிகளில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.
இன்று குமரி கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கேரளா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 5 மற்றும் 6ம் தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்கூறிய தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை!- புழல் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், புழல் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக பெய்யும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புழல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாத வகையில் ஏரியை முதல்வர் ஆய்வு செய்கிறார். ஏரியின் கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அதன் இயக்கம் சரியாக உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு நடத்துகிறார். ஏரியின் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து முதல்வர் கேட்டறிந்தார். நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆகாய தாமரை அகற்றவும், கரையை பலப்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3.30 டி.எம்.சி.யில் தற்போது 2.77 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. 1999ல் முதல்வராக இருந்த கருணாநிதி, புழல் ஏரியை ஆய்வு செய்தார். தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்.

`தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (10ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
11ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
12, 13ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் 3 வரை மழை!- சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இதர பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்
