Today is Saturday 2023 Apr 01
தூத்துக்குடி
பரோட்டா கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்தனர்... பறிபோன தாய், மகள் உயிர்..!- கோவில்பட்டியில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பரோட்டா கிரேவி சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடித்த தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்த இளங்கோவன் என்பவரது மனைவி கற்பகம் மற்றும் அவரது மகள் தர்ஷினி ஆகியோர் கடலையூர் ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா கிரேவி பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டில் வந்து சாப்பிட்டுள்ளனர். நீண்ட நேரமாகியும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாததால் வீட்டருகே உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கற்பகத்தையும் தர்ஷினியையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு: October 13, 2021
தாய், மகள் மரணம், குளிர்பானம், கோவில்பட்டி, Mother, daughter death, Cool drink, Kovilpatti
நள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்!- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி

சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடி பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.

பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்டவிரோதமாக காரில் ஏற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: September 21, 2021
சாத்தான்குளம், வெடி மருந்து, கார் விபத்து, Sattankulam, explosives, car accident
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்