-
தமிழ்நாடு
- சென்னை
- கடலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- வேலூர்
- கள்ளக்குறிச்சி
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டிணம்
- கோவை
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தருமபுரி
- காஞ்சிபுரம்
- சேலம்
- திருச்சி
- திருப்பூர்
- ஈரோடு
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- கரூர்
- பெரம்பலூர்
- திருவாரூர்
-
திண்டுக்கல்
-
கன்னியாகுமரி
-
மதுரை
-
இராமநாதபுரம்
-
சிவகங்கை
-
தேனி
-
தூத்துக்குடி
-
விருதுநகர்
-
தென்காசி
-
திருநெல்வேலி
-
முதன்மை செய்தி
-
தேசிய செய்திகள்
-
மாநில செய்திகள்
மதுரை
மதுரையில் நவீன ஐடி பூங்கா முதல் மெட்ரோ வரை- முதல்வரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்...
மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்தார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:
மதுரை மாவட்டத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும்; மேலூர் பகுதி தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவிகித இடங்களை வகைப்படுத்த வேண்டும்; மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்; மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப பூங்காவினை உருவாக்க வேண்டும்.
மதுரையில் ஜவுளி தொழிலை மேம்படுத்த ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும்; சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்பு சந்தையினை ஏற்படுத்த வேண்டும்; உயிரியல் துறையில் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும்; மதுரையின் மையத்தின் இருக்கும் மத்திய சிறைச்சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும்; சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை தற்போது மதுரை
மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும்; காளவாசலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும்; விரகனூர் சந்திப்பு , மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மாட்டுத்தாவணி , தெற்குவாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும்; பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும்; பழங்காநத்தம் வஉசி பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.
மதுரை மாவட்ட விரைவு போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும்; வைகை நதியினை பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்; மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்; வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பது கழிவுநீர் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
மதுரை மாநகரின் சாலைகளை சீரமைக்க உடனடியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்; அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அதிநவீன கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும்; உலகத் தமிழ் சங்கத்தினை சீரமைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும்; கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐடிஐ உருவாக்க வேண்டும்; மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும்; மதுரை விமான நிலைய விரிவாக்க சுரங்கப்பாதை, மதுரை நகரத்தின் புதிய உள்வட்டச்சாலை , வெளிவட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்கிடவும், அதற்கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும்; விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும்; மேலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும்; மதுரையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து , ஏற்கெனவே உள்ள காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்; மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் அதன் முழுக் கொள்ளளவிற்கு தூர்வாரிட வேண்டும்.
வைகையின் பிறப்பிடமான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்து காற்று மாசுபடுதலை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்; மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை சர்வதேச விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை
உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் ‘தங்க காசு’ பரிசு…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், தென் மண்டல ஐ.ஜி. அன்பு, மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்த ஆண்டு பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு பரிசாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன. 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக 17-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் போட்டி ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், தென் மண்டல ஐ.ஜி அன்பு, எஸ்.பி பாஸ்கரன் மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், முதல் வெற்றி பெறும் காளைகள், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளை, சிறந்த வீரர் ஆகியோருக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கும் காளை உரிமையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தலாக ஒரு தங்கக் காசு மற்றும் வேட்டி வழங்கப்பட உள்ளதாக போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த காலங்களில் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்கு முன்பே 15 வகை பரிசுகள் வழங்கப்படும். தற்போது தங்ககாசும் சேர்த்து வழங்கப்படுவதால் காளை உரிமையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிறந்த வீரர், காளைக்கு வழங்கும் பரிசு பொருட்கள் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு இந்த நோய்த்தொற்று காலத்திலும் தமிழர்களுடைய பாரம்பரியமும், கலாச்சாரமும் தடைபடாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உரிய பாதுகாப்புடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தொற்று பரவாமல் இருக்க பார்வையாளர்கள் அனுமதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், போட்டி சுவாரஸ்யம் எந்த வகையிலும் குறையாத அளவுக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளியூர் பார்வையாளர்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டுகளிக்கலாம். தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்றார்

`டிச.7க்குள் கொரோனா தடுப்பூசி போடவும்; இல்லையென்றால் சம்பளம் கட்!'- ஊழியர்களை பதறவைத்த மதுரை மின்வாரியம்
மதுரை மண்டல மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அலுவலர், பணியாளர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் உமாதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில் ஊழியர்களுக்கு உடல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் அதுகுறித்த சான்றிதழை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால் அவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. அவ்வாறு சான்றிதழ் சமர்பிக்காத நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தம் செய்யப்படும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை சர்ச்சையான நிலையில், தடுப்பூசி போடாத மின்ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் மண்டல தலைமை பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார்.

`7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!'- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

`கேம் விளையாடாதே!'- தந்தை கண்டித்ததால் உயிரை மாய்ந்த 5ம் வகுப்பு மாணவன்
மதுரையில் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை தந்தை திட்டியதால் அச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் ஜெயபிரசாத் (10). இவர் ஆணையூர் தனியார் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜெயபிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் அந்த சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த போக்கை தந்தை கண்டித்து உள்ளார்.
அதில் விரக்தி அடைந்த ஜெயபிரசாத் நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு!'- உயர்நீதிமன்றம் அதிரடி
2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர். அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்
