-
தமிழ்நாடு
- சென்னை
- கடலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- வேலூர்
- கள்ளக்குறிச்சி
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டிணம்
- கோவை
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தருமபுரி
- காஞ்சிபுரம்
- சேலம்
- திருச்சி
- திருப்பூர்
- ஈரோடு
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- கரூர்
- பெரம்பலூர்
- திருவாரூர்
-
திண்டுக்கல்
-
கன்னியாகுமரி
-
மதுரை
-
இராமநாதபுரம்
-
சிவகங்கை
-
தேனி
-
தூத்துக்குடி
-
விருதுநகர்
-
தென்காசி
-
திருநெல்வேலி
-
முதன்மை செய்தி
-
தேசிய செய்திகள்
-
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!- பறிபோன 3 தொழிலாளர்களின் உயிர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசி அருகே களத்தூரில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில் குமார், காசி ஆகியோர் பலியாகினர்.
மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களும் சாத்தூர், கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் சேதம் அடைந்துள்ளது. இதனிடையே பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்த 1க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனைவியுடன் பணத்தை கொள்ளையடித்த ரயில்வே ஊழியர்!- திருவான்மியூர் பறக்கு ரயில் நிலையத்தில் நாடகமாடியது அம்பலம்
திருவான்மியூர் பறக்கு ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளையில் மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடித்து நாடகமாடிய வடமாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.
உடனே அங்கு வந்த ரயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். ரெயல்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சென்னை மண்டல எஸ்.பி. அதிவீரபாண்டியன், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில்குமரேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சம்பவம் நடந்த இடம், ரயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘தனது பெயர் டீக்காராம் மீனா ( 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்திக்கொண்ட டீக்காராம் தனது மனைவியுடன் இணைந்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நேற்று அதிகாலை டீக்காராம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அவரது மனைவி சரஸ்வதி பின் தொடர்ந்து ரயில் நிலையத்திற்குள் சென்றுள்ளார். அங்கு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை டீக்காராம் தனது மனைவியிடம் எடுத்துக்கொடுத்துள்ளார். மேலும், கொள்ளைப்போனது போல பிம்பத்தை உருவாக்க மனைவியை தனது கை, கால்காளை கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, டீக்காராமின் மனைவி பணம் ரூ.1.32 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது கணவன் கூறியபடி அவரது கை,கால்களையும், வாயையும் கட்டிவிட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதபோது அதற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் டீக்காராமும், அவரது மனைவியும் ரயில் நிலையத்திற்குள் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரயில்வே பணம் ரூ. 1.32 லட்சத்தை தாங்களே கொள்ளையடித்துவிட்டு கொள்ளைப்போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ரயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

`மாணவர்களுக்கு கேள்வியும், பதிலும் கொடுத்து விடுகிறார்கள் ஆசிரியர்கள்!'- தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடக்கும் அவலம்
தமிழ்நாட்டில் சில சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்படுவதாகவும், தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. விடையை மட்டும் குறிக்கும் வகையிலான முதல் கட்ட தேர்வு டிசம்பர் மாதத்திலும், விரிவான விடை அளிக்கும் வகையிலான 2 ஆம் கட்ட தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனவும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது நடைபெற்ற முதற்கட்ட தேர்வில் பல சிபிஎஸ்இ பள்ளிகள் குளறுபடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண் கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், முதல் கட்ட பொதுத் தேர்வுக்கான கேள்வித் தாள்களையும், விடைகளையும் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மாணவ, மாணவிகளுக்கு சில பள்ளியின் ஆசிரியர்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேர்வை ஆங்கில எழுத்தான 'c ' என குறிப்பிட வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு 'c ' என குறிப்பிட்டுள்ள கேள்விக்கான பதில் a, b ,d என எந்த தெரிவாக இருந்தாலும் அதனை ஆசிரியர்களே மாற்றியமைத்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள், 2 ஆம் கட்ட தேர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இது போன்ற குளறுபடிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பள்ளியை சாராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதால் எளிதில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதனால் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 20 மாணவர்கள் வரை முழு மதிப்பெண்களை பெறுவதோடு, பள்ளியிலும் 100% தேர்ச்சி காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அந்த பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் சிறுமி கருகிய நிலையில் சடலம்! வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி, அதன்பிறகு காணவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமி கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி வளாகத்திலேயே உடல் எறிந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் சிறுமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

துப்பாக்கி சூடு... பெண்கள் படுகாயம்... 25 பவுன் நகைகள் திருட்டு!- தீரன் பட பாணியில் அரக்கோணம் அருகே நடந்த பயங்கரம்
அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். நள்ளிரவு 12 மணியளவில், புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக மர்ம நபர்கள் தட்டியிருக்கிறார்கள். என்னவோ ஏதோவென பதறிப் போய், புஷ்கரன் வீட்டுக்கதவை திறந்ததும், பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வெளியே நின்றுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த புஷ்கரன் உடனே வீட்டின் கதவை மூடியுள்ளார். எனினும், வெளியிலிருந்த கும்பல் வீச்சரிவாளால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. புஷ்கரன் உள்பட வீட்டில் இருந்த நான்கு பேரையும் வீச்சரிவாளால் வெட்டியதுடன் நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போலீசார், கொள்ளையர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதே பாமகவின் வாடிக்கை!'- ராமதாஸை விமர்சிக்கும் ஈபிஎஸ்
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பா.ம.க.வின் வாடிக்கை என்று விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்ன துரோகம் செய்தது என்று ராமதாஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், "சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களை திசை திருப்பும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தி.மு.க. அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் மூன்று, நான்கு தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயர்வு என்பது போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவேயில்லை.
இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைத்தபோதிலும் தி.மு.க. அரசு குறைக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது. அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை அசைத்து விட முடியாது. இந்த வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம்.
அ.தி.மு.க. வீழ்ந்து விடும் என நினைத்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் அ.தி.மு.க. வளர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 இடங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். தி.மு.கவைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அந்த வழக்குகளில் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாத காரணத்தால் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் பணியை நிறுத்தி விட்டனர். இதனாலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் சென்னை மாநகராட்சியில் ஒரே நேரத்தில் 160 பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அனுபவமில்லாத பொறியாளர்களால் தண்ணீர் எங்கு தேங்கும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. வரும் 17ம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறார்கள்.நாட்டு மக்களைப் பற்றி எந்த கவலையும் தி.மு.க. அரசுக்கு இல்லை" என்று கூறினார்.
தொடர்ந்து, திமுக காலை வாரியதால் பாமக தோல்வியுற்றதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஈபிஎஸ், சட்டமன்ற தேர்தலில் பாமக தோல்வியடைந்ததற்கு மக்கள் வாக்களிக்காததே காரணம். தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதுதான் பா.ம.க.வின் வாடிக்கை. கூட்டணியில் இருந்து விலகியதாக பாமக அறிவித்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டி என ராமதாஸ் அறிவித்துவிட்டார்" என்று கூறினார்.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்
